Paristamil Navigation Paristamil advert login

திருட்டுச் சிற்றுந்து - காற்துறையினரை மோதியெறிந்த சாரதி!!

திருட்டுச் சிற்றுந்து - காற்துறையினரை மோதியெறிந்த சாரதி!!

10 மாசி 2024 சனி 14:26 | பார்வைகள் : 2999


நேற்று இரவு 22h30 மணியளவில் லியோன் நகரிற்கு அண்மித்த நகரமான Villeurbanne இல் காவற்துறையினர் திருடப்பட்ட சிற்றுந்து ஒன்றை நிறுத்த எத்தனித்துள்ளனர்.

திருடப்பட்ட வாகனச் சாரதி, காவற்துறையினரின் கட்டளைக்கு இணங்க மறுதலித்து, காவற்துறையினரின் இரண்டு சிற்றுந்துகளை மோதியெறிந்துள்ளான்.

இதில்; எட்டுக் காவற்துறையினர் படுகாயமடைந்துள்ளனர். மூவர் தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

திருடப்பட்ட சிற்றுந்தைத் துரத்திச் சென்ற காவற்துறையினர் மீது கடுமையான வன்முறைத் தாக்குதல் நடந்துள்ளது என காவற்துறையினரின் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

மோதப்பட்ட வாகனங்களின் படங்களை X சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து எத்தகைய வன்முறை காவற்துறையினர் மீது மேற்கொள்ளப்பட்டுள்ளது எனக் காவற்துறையின் சிறப்பு பிரிவான UPS EST  பதிவு செய்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்