Paristamil Navigation Paristamil advert login

கடுமையான வெள்ள எச்சரிக்கை - தொடரும் செம்மஞ்சள் எச்சரிக்கை!!

கடுமையான வெள்ள எச்சரிக்கை - தொடரும் செம்மஞ்சள் எச்சரிக்கை!!

10 மாசி 2024 சனி 16:50 | பார்வைகள் : 2076


தொடர்ச்சயாக பல மாவட்டங்கள் இன்று கடுமையான வெள்ள எச்சரிக்கைக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதில் மேலும் நான்கு மாவட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

பெருமழை வெள்ளத்தில் இந்த மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுப் பேரனர்த்தம் நிகழும் அபாயம் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பிரான்சின் மேற்கு, வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகள் பெருமழைக்கு உள்ளாகின்றன.

Charente-Maritime, Gironde, Landes, Pyrénées-Atlantiques ஆகிய பகுதிகளின் 11 மாவட்டங்களிற்கு வானிலை அவதானிப்பு மையம் கடுமையான வெள்ள செஞ்சிவப்பு எச்சரிக்கையை வழங்கி உள்ளது.

கடைசியாக பா-து-கலே பகுதியும் இந்த எச்சரிக்கைக்குள் தள்ளப்பட்டுள்ளது. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்