Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் மீண்டும் மின்வெட்டு அமுலாகும் அபாயம்

இலங்கையில் மீண்டும் மின்வெட்டு அமுலாகும் அபாயம்

2 ஆவணி 2023 புதன் 06:31 | பார்வைகள் : 8737


இலங்கையில் ஐந்து மாவட்டங்களில் நான்கு மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

சமனலாவ நீர்த்தேக்கத்திலிருந்து விவசாயப் பணிகளுக்காக நீர் திறந்து விடப்பட்டால், இவ்வாறு மின் தடை ஏற்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு 4 மணித்தியாலங்கள் மின்வெட்டு ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்