Paristamil Navigation Paristamil advert login

ஏமனில்  கண்ணிவெடி வெடித்து விபத்து! பரிதாபமாக பலியாகிய 3  குழந்தைகள் 

ஏமனில்  கண்ணிவெடி வெடித்து விபத்து! பரிதாபமாக பலியாகிய 3  குழந்தைகள் 

14 மாசி 2024 புதன் 08:13 | பார்வைகள் : 2613


ஏமனில் புலம்பெயர்ந்த அகதிகள் முகாம்கள் உள்ள பகுதியில் கண்ணிவெடி வெடித்துள்ளது.

 3 குழந்தைகள் உயிரிழந்த நிலையில்  4 பேர் காயமடைந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏமன் - தெற்கே லாஜ் மாகாணத்தில் புலம்பெயர்ந்த அகதிகள் முகாம்கள் உள்ளன. 

இதில், போரால் பாதிக்கப்பட்டு தப்பி வந்த நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் தங்கியுள்ளார்.

இந்த நிலையில், அந்த பகுதியில் திடீரென கண்ணிவெடி ஒன்று வெடித்ததில் 3 குழந்தைகள் பலியாகி உள்ளனர்.

4 பேர் காயமடைந்தனர்.

கூடாரங்களுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்த அந்த குழந்தைகள், மண்ணில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியை தெரியாமல் மிதித்ததால் வெடித்ததாக அதிகாரி ஒருவர் கூறினார். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்