Paristamil Navigation Paristamil advert login

யாழில் ஐஸ்க்ரீம் கொள்வனவு செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

யாழில் ஐஸ்க்ரீம் கொள்வனவு செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

15 மாசி 2024 வியாழன் 08:24 | பார்வைகள் : 1867


யாழ்ப்பாணத்தில் தவளையுடன் ஐஸ்க்ரீம் வழங்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் – தொண்டமானாறு பகுதியில் உள்ள விற்பனை நிலையத்தில் இந்த ஐஸ்க்ரீம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய சூழலில் உள்ள குளிர்பான விற்பனை நிலையமொன்றில் நேற்று ஐஸ்கிரீம் குடிக்க சென்றவருக்கே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் குறித்த குளிர்பான விற்பனை நிலையத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்