Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் சட்டபூர்வ நாணயமாக ரூபா தொடர்ந்து அமுலில் - மத்திய வங்கி அறிவிப்பு

இலங்கையில் சட்டபூர்வ நாணயமாக ரூபா தொடர்ந்து அமுலில் - மத்திய வங்கி அறிவிப்பு

3 ஆவணி 2023 வியாழன் 02:29 | பார்வைகள் : 4896


உள்நாட்டு கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவுக்காக இலங்கையில் சட்டபூர்வமான நாணயமாக இலங்கை ரூபா தொடர்ந்து அமுலில் இருக்கும். இந்திய ரூபா குறித்து வெளியாகும் பொய்யான கருத்துக்கள் குறித்து மக்கள் அவதானம் செலுத்த கூடாது என இலங்கை மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.

இந்திய ரூபா தொடர்பில் மக்கள் மத்தியில் பரப்பப்படும் தவறான கருத்துக்களை தெளிவுப்படுத்தும் வகையில் மத்திய வங்கி விசேட அறிக்கை வெளியிட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பன்னாட்டு வர்த்தகம் மற்றும் எல்லை கடந்த வங்கித்தொழில் கொடுக்கல் வாங்கல்கள் ஆகியவற்றை வசதிப்படுத்தும் வகையில் இலங்கை மத்திய வங்கி காலத்துக்கு காலம் பெயர் குறிப்பிடப்பட்ட வெளிநாட்டு நாணயங்களாக தெரிவு செய்யப்பட்ட வெளிநாட்டு நாணயங்களுக்கு அதிகாரமளிக்கிறது.

1979.05 மாதம் முதல் இலங்கை மத்திய வங்கி அவ்வப்போது பெயர்குறிப்பிடப்பட்ட வெளிநாட்டு நாணயங்களை அங்கிகரித்துள்ளது. தற்போது பெயர்குறிப்பிட்ட வெளிநாட்டு நாணயக்காளாக வங்கித்தொழில் சட்டம் மற்றும் வெளிநாட்டுச் செலாவணிச் சட்ட ஏற்பாடுகளின் கீழ் 2022 உட்சேர்க்கப்பட்ட இந்திய ரூபாவுடன் டொலர்,குறோணர்,ரென்மின்பீ,பவுன்,யூரோ,பிராங்க்,பாத்,யென் உள்ளடங்களாக 16 நாடுகளின் நாணய அலகுகளுக்கு அங்கீகாரமளிக்கப்பட்டுள்ளன.

பெயர்குறிப்பிடப்பட்ட வெளிநாட்டு நாணயங்களாக வெளிநாட்டு நாணயங்களை அங்கிகரிப்பதன் முக்கிய நோக்கம் இரு நாடுகளுக்கிடையில் வர்த்தகம் மற்றும் முதலீடு உறவுகளை ஊக்குவிப்பதாகும்.இரட்டை மாற்றுதலுடன் தொடர்புடைய மேலதிக பரிமாற்றுச் செலவுகளை அது குறைப்பதுடன் முறையான வங்கித்தொழில் வழியூடாக வர்த்தக் கொடுக்கல் வாங்கல்களை ஊக்குவிப்பதற்கு ஆதரவளிக்கும். உள்நாட்டு கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவுக்காக இலங்கையில் சட்டபூர்வமான நாணயமாக இலங்கை ரூபா தொடர்ந்து அமுலில் இருக்கும்.

 இலங்கை -இந்திய சுதந்திர வர்த்தக உடன்படிக்கை அமுலுக்கு வந்ததன் பின்னர் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகம் துரிதமான வளர்ச்சியடைந்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார நடவடிக்கைகளை விரிவுப்படுத்துவதற்காக குறிப்பாக இரு நாடுகளுக்கிடையில் ஏற்கெனவே வழக்கில் உள்ள வணிக உறவுகளை ஊக்குவிப்பதற்காகவும் இலங்கை மத்திய வங்கி இலங்கையில் பெயர்குறிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக இந்திய ரூபாவை அங்கீகரிப்பதற்கான விருப்பத்தை இந்திய நாணய ஆணையமாகிய இந்திய றிசேர்வ் வங்கிக்கு பல முறை அறிவித்தது.

இதற்கமைய இந்திய றிசேர்வ் வங்கியின் ஒப்புதலுடன் 2022.08 காலப்பகுதியில் இலங்கையில் பெயர்குறிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக இந்தியா ரூபாவுக்கு அங்கிகாரம் வழங்கப்பட்டது.இருப்பினும் இலங்கையில் பெயர்குறிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமொன்றாக இந்திய ரூபாவின் பாவனையானது இந்திய றிசேர்வ் வங்கியின் அனைத்து கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டுள்ளது.

வெளிநாட்டு நாணயமாக இந்திய ரூபாவை அங்கீகரிப்பதற்கு வர்த்தக கொடுக்கல் வாங்கல்களுக்காக முறைசாரா வழிகளை பயன்படுத்துவதற்குப் பதிலாக வங்கித்தொழில் வழிகளை பயன்படுத்துவதற்கு வர்த்தகங்களை ஊக்குவித்து,இந்திய ரூபாவை ஐ.அ.டொலராகவும்,ஐ.அ.டொலரை இலங்கை ரூபாவாகவும் மறுதலையாகவும் செய்யப்படும் இரட்டை வர்த்தகங்களுக்கு விசேடமாக இந்தியன் ரூபா தொடர்புப்பட்ட சீரான வங்கித்தொழில் கொடுக்கல்வாங்கல்களை வசதிப்படுத்தல் உள்ளடங்களாக இலங்கைக்கு பல அ னுகூலங்கங்களை பெற்றுக்கொடுக்கும்.

பெயர்குறிக்கப்பட்ட நாணயமாக இந்திய ரூபாவை அங்கீகரித்தமையானது உள்நாட்டு கொடுப்பனவுக்கும் தீர்ப்பனவுக்கும் இலங்கையில் இந்திய ரூபா சட்டபூர்வமாக்கப்படவில்லை.இலங்கையில் வசிப்பவர்களுக்கிடையில் அல்லது அவர்கள் மத்தியில் நிறைவேற்றப்படுகின்ற ஏதேனும் கொடுக்கல் வாங்கல்கள் இலங்கையின் சட்டபூர்வமான இலங்கை ரூபாவிலேயே முன்னெடுக்கப்படும்.

ஆகவே இந்திய ரூபா தொடர்பில் மக்கள் மத்தியில் பரப்பப்படுகின்ற தவறான கூற்றுக்களுக்கு மக்கள் அவதானம் செலுத்த கூடாது என்பதை வலியுறுத்துகிறோம்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்