இலங்கையில் கிணற்றை எட்டிப்பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

17 மாசி 2024 சனி 10:36 | பார்வைகள் : 6601
ரிதிகம பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வெலகெதர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றின் தோட்டத்தில் உள்ள கிணற்றிலிருந்து சிசு ஒன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் தண்ணீர் இல்லாததால் தண்ணீர் மோட்டாரை போடும் முன் கிணற்றை சோதித்த வீட்டின் உரிமையாளர், கிணற்று தண்ணீரில் பொம்மை ஒன்று மிதப்பதைக் கண்டு அதை அகற்ற முற்பட்ட போது, பொம்மை இல்லை என்பதை உணர்ந்தார்.
பின்னர் அது ஒரு சிசுவின் சடலம் என தெரியவந்தது.
பின்னர், வீட்டின் உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டதுடன், குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு நீதவானின் உத்தரவின் பேரில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1