Paristamil Navigation Paristamil advert login

கொழும்பில் போக்குவரத்துச் சட்ட விதிகளை மீறிய 793 பேர் அடையாளம்

கொழும்பில் போக்குவரத்துச் சட்ட விதிகளை மீறிய 793 பேர் அடையாளம்

18 மாசி 2024 ஞாயிறு 10:28 | பார்வைகள் : 1622


கொழும்பையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி   பொருத்தப்பட்ட சிசிரிவி கமெரா காட்சிகளின் அடிப்படையில் போக்குவரத்துச் சட்டவிதிகளை மீறிய 793 பேர் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு சுமார் 300 பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்தார்.

இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்தியமை தொடர்பில் கடந்த வருடம் 26,000 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்