Paristamil Navigation Paristamil advert login

வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலய ஆலயங்களில் வழிபட பொதுமக்களுக்கு அனுமதி

வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலய ஆலயங்களில் வழிபட பொதுமக்களுக்கு அனுமதி

18 மாசி 2024 ஞாயிறு 16:04 | பார்வைகள் : 950


யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச செயலக பிரிவில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் சில ஆலயங்களில் இராணுவத்தினரின் கட்டுப்பாடுகளுடன் பொது மக்கள் வழிபாடுகளில் ஈடுப்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள 21 ஆலயங்களில் ஏழு ஆலயங்களுக்கு இனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆலய வழிபாடுகளுக்கு செல்ல விரும்புவோர் , தமது பெயர் , முகவரி ,அடையாள அட்டை இலக்கம் ,தொலைபேசி இலக்கம் என்பவற்றை ஆலய நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கவேண்டும்.

குறித்த விபரங்களை நிர்வாகத்தினர் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகம் என்பவற்றில் கையளிக்கவேண்டும்.

மேலும், குறித்த உயர் பாதுகாப்பு வலயத்தினுள் செல்வதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளை இராணுவமே மேற்கொள்ளும் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்