அமெரிக்க-பிரான்ஸ் ஜனாதிபதிகள் தொலைபேசியூடாக அவசர கலந்துரையாடல்!

24 மாசி 2024 சனி 07:00 | பார்வைகள் : 9039
அமெரிக்க மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதிகள் தொலைபேசியூடாக உரையாடியுள்ளனர். இரஷ்ய உக்ரேன் யுத்தம் தொடர்பாக அவர்கள் உரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று பெப்ரவரி 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அவர்கள் உரையாடியிருந்தார்கள். அதன்போது ’இரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போர் நிறுத்தப்படவேண்டும்’ அதற்கு அவசியமான அனைத்து உதவிகளையும் உக்ரேனுக்கு வழங்கவேண்டும் என இருவரும் அதில் கலந்தாலோசித்திருந்தார்கள் என வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.
வரும் பெப்ரவரி 26 ஆம் திங்கட்கிழமை பரிசில் இது தொடர்பான சந்திப்பு ஒன்று இடம்பெற உள்ளது. பல்வேறு நாட்டு தலைவர்கள் அதில் வீடியோ அழைப்பினூடாக கலந்துகொள்வார்கள் என அறிய முடிகிறது.