Paristamil Navigation Paristamil advert login

மரணத்தை முன்பே கணித்தாரா பவதாரிணி?

மரணத்தை முன்பே கணித்தாரா பவதாரிணி?

27 தை 2024 சனி 08:47 | பார்வைகள் : 2013


இசையமைப்பாளர் இளையராஜாவின் ஒரே மகளான பவதாரிணி கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் சிகிச்சைக்காக இலங்கைக்கு சென்றபோது, உயிரிழந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளுது. 47 வயதே ஆகும் பவதாரிணியின் மறைவு ஒட்டுமொத்த திரையுலக ரசிகர்களையும், பிரபலங்களையும் சோகத்தில் ஆழ்த்திய நிலையில், ஏற்கனவே தன்னுடைய மரணத்தை கணித்து பவதாரிணி செய்துள்ள செயல் தற்போது சமூக வலைதளத்தில் அதிகம் பேசும் பொருளாக மாறி உள்ளது

பவதாரிணி, ஜனவரி 25ஆம் தேதி மாலை 5:30 மணி அளவில் இலங்கையில் உள்ள இயற்கை வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து இவருடைய உடல் நேற்று மாலை சென்னை கொண்டுவரப்பட்ட நிலையில், தி நகரில் உள்ள இசைஞானி இளையராஜா இல்லத்தில் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. இவருடைய உடலுக்கு அமைச்சர் உதயநிதி முதல் தேமுதிக செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், விஷால், கார்த்திக், சிம்பு, விஜய் ஆண்டனி, பாக்யராஜ், பாடகர் மனோ உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

அதேபோல் இளையராஜாவின் உறவினர்களான கங்கை அமரன், வெங்கட் பிரபு, யுவன் சங்கர் ராஜா, பிரேம்ஜி, வாசுகி பாஸ்கர், போன்ற அனைவரும் இவருடைய உடலைப் பார்த்து கண்ணீர் விட்டு கதறிய சம்பவம் பார்ப்பவர்கள் நெஞ்சங்களையே உறைய வைத்தது. இதை தொடர்ந்து இவரது இறுதி சடங்கு அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் நடக்க உள்ளதால் அங்கு கொண்டுசெல்லப்பட்டது.
 
பவதாரிணிக்கு உடல் அளவில் பிரச்சனைகள் இருந்த போதும் அதை அவர் வெளிக்காட்டி கொள்ளவில்லை. மிகவும் ஒல்லியாக சென்றுகொண்டிருப்பது பற்றி, கேட்டபோது கூட சர்க்கரை நோய் இருப்பதாக கூறியுள்ளார். கடந்த 5 மாதத்திற்கு முன்பு, பரிசோதனை செய்த போது தான் அவருக்கு புற்று நோய் 4-ஆவது ஸ்டேஜில் இருப்பது அவரின் உறவினர்களுக்கு தெரியவந்துள்ளது.

எனினும் பாவதாரிணியிடம் யாரும் இது பற்றி தெரிவிக்காமல்... தொடர் சிகிச்சையும் எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அதே போல் கடந்த மாதம் தான் பவதாரிணிக்கு புற்று நோய் இருப்பது அவருக்கே தெரியவந்துள்ளது. அல்லோபதி மருத்துவர்கள் கை விரித்த நிலையில், ஆயுர்வேத சிகிச்சை மூலம் வாய்ப்புள்ளதை அறிந்து தான் பவதாரிணியை இலங்கைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

ஆயுர்வேத முறையில் சிகிச்சை பெற்று, உடல் நலத்துடன் மீண்டு வருவோம் என்கிற நம்பிக்கையில் சிகிச்சைக்கு சம்மதம் தெரிவித்தாலும், மீண்டும் தன்னுடைய குடும்பத்தினரை பார்ப்போமா என்கிற சந்தேகமும் இருந்துள்ளது. எனவே இலங்கைக்கு செல்ல முடிவெடுத்ததுமே... தன்னுடைய நண்பர்கள், சித்தப்பா, அண்ணன் வெங்கட் பிரபு, தம்பி பிரேம் ஜி, யுவன், கார்த்திக் ராஜா... மற்றும் அனைவரின் ஒட்டு மொத்த குடும்பத்தையும் சந்தித்து அவர்களுடன் நேரம் செலவிட்டுள்ளார். 

அனைவருக்கு பிடித்ததையும் வாங்கி கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்ததாக கூறப்படுகிறது. விஷயம் தற்போது வெளிவரவே... தன்னுடைய மரணத்தை 10 நாட்களுக்கு முன்பே கணித்து தான் பவதாரிணி இப்படியெல்லாம் செய்தாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்