பிரதமரின் அறிவிப்பினை தொடர்ந்து - A13 முற்றுகையை நிறுத்த முடிவு செய்த விவசாயிகள்!
.jpeg)
27 தை 2024 சனி 09:26 | பார்வைகள் : 15851
நேற்று வெள்ளிக்கிழமை மாலை முதல் A13 நெடுஞ்சாலையை விவசாயிகள் முடக்கி வைத்திருந்த நிலையில், பிரதமரின் அறிவிப்பை தொடர்ந்து அது நீக்கப்பட்டுள்ளது.
Buchelay (Yvelines) சுங்கச்சாவடிக்கு அருகே விவசாயிகள் தங்களது உழவு இயந்திரத்தை நிறுத்தி வைத்து, வீதியின் இரு பக்கங்களையும் முடக்கியிருந்தனர். இல் து பிரான்ஸ் மாகாண முதல்வர் Valérie Pécresse அவர்களைச் சென்று சந்தித்தார்.
இந்நிலையில், நேற்று மாலை பிரதமர் கேப்ரியல் அத்தால் சில சலுகைகளை வெளியிட்டார். அவற்றினை விவசாயிகள் முழுமனதாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றபோதும், A13
நெடுஞ்சாலை முற்றுகையை நிறுத்தியுள்ளனர். அவர்கள் அங்கிருந்து இரவு நேரத்தில் கலைந்து சென்றனர்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025