Paristamil Navigation Paristamil advert login

இன்று Indre-et-Loire நகருக்கு பயணமாகும் பிரதமர்! - மீண்டும் விவசாயிகளுடன் சந்திப்பு!!

இன்று Indre-et-Loire நகருக்கு பயணமாகும் பிரதமர்! - மீண்டும் விவசாயிகளுடன் சந்திப்பு!!

28 தை 2024 ஞாயிறு 06:57 | பார்வைகள் : 1859


பிரதமர் கேப்ரியல் அத்தால் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை  Indre-et-Loire நகருக்கு பயணிக்க உள்ளார். விவசாயிகளுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக அவர் அங்கு பயணிக்க உள்ளதாக அறிய முடிகிறது.

முன்னதாக வெள்ளிக்கிழமை கேப்ரியல் அத்தால் Montastruc-de-Salies (Haute-Garonne) நகருக்கு பயணித்திருந்தார். அங்கு விவசாயிகளுக்கு 10 நலத்திட்டங்கள் கொண்ட அறிவிப்பை வெளியிட்டிருந்தார். ஆனால் அதனை விவசாயிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. 

அந்த சந்திப்பு இடம்பெற்று இரண்டாவது நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அவர்  Indre-et-Loire நகருக்கு பயணிக்க உள்ளார்.

விவசாயிகள் தங்களது போராட்ட வடிவத்தை மாற்றிக்கொண்டு வருகின்றனர். Rungis  சந்தையை முடக்கவும், தலைநகர் பரிசை முடக்கவும் திட்டமிட்டுள்ள நிலையில், அவர்களை சமாதானமாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்