Paristamil Navigation Paristamil advert login

இளையராஜாவின் வாழ்க்கையில் ஒளிந்து இருக்கும் ஒரு தலைக் காதல் பற்றித் தெரியுமா?

 இளையராஜாவின் வாழ்க்கையில் ஒளிந்து இருக்கும் ஒரு தலைக் காதல் பற்றித் தெரியுமா?

28 தை 2024 ஞாயிறு 08:18 | பார்வைகள் : 1903


இளையராஜாவின் மனைவி பெயர் ஜீவா. இவர் கடந்த 2011-ம் ஆண்டே மரணமடைந்துவிட்டார். ஜீவாவை திருமணம் செய்துகொள்ளும் முன்னர் வீணா காயத்ரி என்பவரை ஒன் சைடாக காதலித்துள்ளார் இளையராஜா. அந்த காதல்  பற்றி தற்போது பார்க்கலாம். கடந்த 1970-ம் ஆண்டு வீணா காயத்ரியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார் இளையராஜா. வீணை வாசிப்பதில் ஸ்பெஷலிஸ்டாக இருந்த காயத்ரியை பாராட்டி அவரது திறமையை அங்கீகரிக்கும் விதமாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, வீணாவுக்கு இசைத் துறையில் முக்கிய பொறுப்பையும் வழங்கி இருந்தாராம்.

வீணாவை ஒரு தலையாக காதலித்து வந்த இசைஞானி, ஒருகட்டத்தில் அந்த பெண்ணிடமே சென்று தன்னுடைய காதலை வெளிப்படையாக சொல்லி புரபோஸ் செய்துள்ளார். ஆனால் இளையராஜாவின் காதலை ஏற்க மறுத்த வீணா காயத்ரி அவருக்கு நோ சொல்லிவிட்டாராம். இருந்தாலும் மனம்தளராத இளையராஜா அந்தப் பெண்ணின் மீதான காதலை கைவிட முடியாமல் அவரையே உருகி உருகி காதலித்து வந்துள்ளார். ஆனால் இறுதிவரை தன்னுடைய முடிவில் தீர்க்கமாக இருந்த வீணா காயத்ரி, தன் சமூகத்தை சேர்ந்த ஒருவரையே திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டாராம்.

தன்னுடைய ஒருதலைக் காதல், தோல்வியில் முடிந்ததை நினைத்து துவண்டு விடாமல் சினிமாவில் அடுத்தடுத்து ஹிட் பாடல்களை கொடுத்து வெற்றிப்பாதைக்கு திரும்பி இருக்கிறார். அந்த காதல் தோல்விக்கு பின் சினிமாவில் இசையமைக்க தொடங்கிய இசைஞானி, இன்று பல்வேறு காதல் ஜோடிகளை தன்னுடைய காதல் பாடல்களால் இணைத்து வருகிறார். எக்கச்சக்கமான காதல் பாடல்களை கொடுத்த இளையராஜாவின் வாழ்க்கையில் இப்படி ஒரு வலிகள் நிறைந்த ஒரு தலைக் காதலும் ஒளிந்து கிடக்கிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்