Paristamil Navigation Paristamil advert login

ஐ.நா. அமைப்பின் உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டு  ஹமாஸுடன் இணைந்துள்ளார்களா...?

ஐ.நா. அமைப்பின் உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டு  ஹமாஸுடன் இணைந்துள்ளார்களா...?

28 தை 2024 ஞாயிறு 13:58 | பார்வைகள் : 5766


ஹமாஸின் ஒக்டோபர் 7ஆம் திகதி தாக்குதலிற்கு  பாலஸ்தீன அகதிகளிற்கான ஐநா அமைப்பு உதவியதாக தெரிவித்து அந்த அமைப்பிற்கான நிதி உதவியை உலக நாடுகள் இடைநிறுத்தியுள்ளன.

பிரிட்டன் உட்பட எட்டு நாடுகள் பாலஸ்தீனத்தின அகதிகளுக்கான ஐநா அமைப்பிற்கான நிதி உதவியை நிறுத்தியுள்ளன.

உலகநாடுகளின் இந்த நடவடிக்கையை ஐநா அமைப்பு கண்டித்துள்ளது.

உலகநாடுகளின் இந்த முடிவு அதிர்ச்சியளிப்பதாக ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.

யுஎன்ஆர்டபில்யூஏ என்பது பிரதானமாக காசாவிற்கான மனிதாபிமான அமைப்பு இரண்டு மில்லியனிற்கும் மேற்பட்ட மக்கள் உயிர்வாழ்வதற்காக அந்த அமைப்பினை நம்பியிருக்கின்றனர் என அந்த அமைப்பின் தலைவர் பிலிப்பே லசாரினி தெரிவித்துள்ளார்.

சிறிய எண்ணிக்கையிலான பணியாளர்களிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை அடிப்படையாக வைத்து நிதி இடைநிறுத்தப்பட்டுள்ளமை அதிர்ச்சியளிக்கின்றது  என தெரிவித்துள்ள அவர் ஏற்கனவே குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நாங்கள் சில பணியாளர்களை இடைநிறுத்தியுள்ளோம்  விசாரணைகள் தொடர்கின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

பிராந்தியத்தில் யுத்தம் இடம்பெயர்வு அரசியல் நெருக்கடிகள் காணப்படும் சூழ்நிலையில் இந்த தடைகள் பொருத்தமற்றவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


 

வர்த்தக‌ விளம்பரங்கள்