இலங்கையில் கடவுச்சீட்டு கட்டணம் இரு மடங்காக அதிகரிப்பு!

31 தை 2024 புதன் 16:01 | பார்வைகள் : 5926
இலங்கையில் சாதாரண கடவுச்சீட்டு சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளது.
நாளை முதல் அதிகரிக்கப்படும் என இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கடவுச்சீட்டு விண்ணப்பங்களுக்கான கட்டணம் 5,000 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு 10,000 ரூபாயாக அறவிடப்படவுள்ளது.