Paristamil Navigation Paristamil advert login

காங்கிரசுக்கு ஒரு சீட் கூட கொடுக்க மாட்டேன்

காங்கிரசுக்கு ஒரு சீட் கூட கொடுக்க மாட்டேன்

31 தை 2024 புதன் 16:51 | பார்வைகள் : 1899


மேற்கு வங்கத்தில் காங்கிரசுக்கு ஒரு சீட் கூட கொடுக்க மாட்டேன் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மால்டாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மம்தா பேசியதாவது: மேற்கு வங்கத்தில் ஒரு எம்.எல்.ஏ., கூட இல்லாத காங்கிரஸ் கட்சிக்கு 2 தொகுதிகளை கொடுக்க நான் தயாராக இருந்தேன். அந்த 2 தொகுதியிலும் அவர்களை வெற்றி பெறச் செய்யவும் தயாராக இருந்தேன். ஆனால் அவர்கள் கூடுதலாக தொகுதிகள் வேண்டும் என்று கேட்கிறார்கள். இப்பொழுது சொல்கிறேன் அவர்களுக்கு ஒரு சீட்டு கூட நான் கொடுக்க மாட்டேன். 

மாநிலத்தின் அனைத்து நிலுவைத் தொகைகளையும் வழங்க நாளை வரை மத்திய அரசுக்கு கெடு விதித்துள்ளேன். நிலுவைத் தொகைகளை தரவில்லை என்றால், பிப்ரவரி 2ம் தேதி முதல் தர்ணா நடத்துவேன். அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தர்ணாவில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அனைவரின் ஆதரவையும் நான் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்