Paristamil Navigation Paristamil advert login

யாழில் இளைஞன் மீது தாக்குதல் மேற்கொண்ட பொலிஸார்

யாழில் இளைஞன் மீது தாக்குதல் மேற்கொண்ட பொலிஸார்

1 மாசி 2024 வியாழன் 11:51 | பார்வைகள் : 3814


யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை பொலிஸார் கொடூரமாக தாக்கிய நிலையில் படுகாயம் அடைந்துள்ளார். 

வீதியால் சென்ற இளைஞன் ஒருவரை சந்தேகத்தின் பேரில் வழி மறைத்த அச்சுவேலி போலீசார் இளைஞனை தாக்கி மதிவுடன் எறிந்த நிலையில் இளைஞனின் கால்கள் முறிந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞன் வைத்தியசாலையில் தனது முறைப்பாட்டை போலீசாருக்கு வழங்கியுள்ளார்.

குறித்த முறைப்பாட்டில் தான் சைக்கிளில் புத்தூர் பகுதியில்  சென்று கொண்டிருந்தபோது சிவில் உடைகள் வந்த அச்சுவேலி போலீஸ் நிலைய உத்தியோகத்தர் சர்மிலன் தன்னை நில்லடா என கூறினார்.

எனக்கு அன்று காய்ச்சல் காரணமாக மெதுவாகவே சைக்கிள் பயணித்தேன், பொலிஸார் கூப்பிட்டது எனக்கு தெளிவாக விளங்கவில்லை.
மோட்டார் சைக்கிளை எனக்கு முன்னால் நிறத்தி இறங்கட எனக் கூறினார் ஏன் என கேட்டேன் என்னை முகத்தைப் பொத்தி அடித்தார்கள்.

வர்த்தக‌ விளம்பரங்கள்