Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் மனைவியை அடித்துக்கொலை செய்த தந்தை - சடலத்தை புதைத்த மகன்

இலங்கையில் மனைவியை அடித்துக்கொலை செய்த தந்தை - சடலத்தை புதைத்த மகன்

30 ஆடி 2023 ஞாயிறு 03:09 | பார்வைகள் : 2602


ரிதிமாலியத்த, இரணஹல்பொல பகுதியில் பெண்ணொருவர் அடித்துக்கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

டபிள்யூ.எம். சோமாவதி என்ற 50 வயதான பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 2021ஆம் ஆண்டு முதல் குறித்த பெண்  காணாமல்போயுள்ளதாக சந்தேகநபர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில்  பொலிஸார் முறைப்பாடு செய்த சந்தேகநபர்களிடம் விசாரனைகளை மேற்கொண்டனர். இதன் போது குறித்த பெண் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்ட தகவல் சந்தேக நபர்களிடம் இருந்து வெளியாகியுள்ளது.

கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும் அவருடைய கணவனுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில் பெண் தாக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், சடலத்தை மூத்த மகனின் உதவியுடன் கணவன்  தோட்டத்தில் புதைத்ததாக  விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது

சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் கணவர் (வயது 70), அவருடைய மூத்த மகன் (வயது 26) ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்