மறைந்த பின்னணிப் பாடகி பவதாரிணி வாழ்க்கையில் நடந்தது என்ன?
1 மாசி 2024 வியாழன் 15:41 | பார்வைகள் : 5804
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பின்னணிப் பாடகியுமான பவதாரிணி கடந்த வாரம் புற்றுநோய் காரணமாக காலமானார். இது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, அவரது மரணத்தால் இளையராஜா, யுவன், கார்த்திக் ராஜா வெங்கட்பிரபு என குடும்பத்தார் கலக்கத்துடன் நின்ற காட்சிகள் காண்போரைக் கலங்கடிக்கச் செய்தது.
பவதாரிணி மறைவின் போது, தான் இறப்பது அவருக்கு முன்பே தெரியும், குடும்பத்துடன் இதனால் நேரம் அதிகம் செலவிட்டார் என்பது போன்ற சில தகவல்களும் வலம் வந்தன. பவதாரிணி தனது கணவர் சபரிக்கு விவாகரத்து கொடுக்க இருந்தார் என்பதும் அதில் ஒன்று.
இது குறித்து இப்போது புதிதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, பவதாரிணி இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு தன் கணவர் சபரியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரைப் பிரிந்திருந்தது உண்மைதான். ஆனால், தன்னுடைய மனைவி பவதாரிணிக்கு புற்றுநோய் என்று தகவல் தெரிந்ததும் உடனே வந்து சந்தித்து பேசியிருக்கிறார் சபரி.
இந்த ஒரு மாதத்தில் அவர்கள் இருவருக்குள்ளும் காதல் இன்னும் அதிகமாகி இருக்கிறது. பவதாரிணியை எப்படியும் காப்பாற்றி விட வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்திருக்கிறார் சபரி. ஆனால், தன் உடல்நிலை குறித்து அறிந்து கொண்ட பவதாரிணி அவரது நன்மைக்காகவே பிரிய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் என்கிறார்கள்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan