Paristamil Navigation Paristamil advert login

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியை அகழ்வு - நீதிமன்றம் எடுக்கவுள்ள தீர்மானம்

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியை அகழ்வு - நீதிமன்றம் எடுக்கவுள்ள தீர்மானம்

2 மாசி 2024 வெள்ளி 16:29 | பார்வைகள் : 1224


முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் இனங்காணப்பட்டிருந்த மனிதப்புதைகுழியை மீண்டும் அகழ்வது தொடர்பான விசாரணை முல்லைத்தீவு நீதிமன்றில் பெப்ரவரி 22 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

மார்ச் மாதம் முதலாம் திகதி மீண்டும் அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்படவிருந்தன.

ஆனால் அதற்கான சாதக நிலைகள் உள்ளனவா என்று ஆராய்வதற்காகவும், அகழ்வுக்கான நிதியொதுக்கீடு சரியானவகையில் மேற்கொள்ளப்படுமா என்று பரிசீலிக்கவும் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது எனத் தெரியவருகின்றது.

இந்த அகழ்வுப்பணிக்கான நிதியை விடுவிப்பதில் அரசாங்கம் மெத்தனப்போக்கை கடைப்பிடிப்பதும், குறித்த மனிதப்புதைகுழி வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக சிறிலங்காவை விட்டே தப்பித்துச் சென்றமையும் குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்