Paristamil Navigation Paristamil advert login

போருக்கு தயாராகுங்கள் - வடகொரிய அதிபரின் உத்தரவு...

போருக்கு தயாராகுங்கள் - வடகொரிய அதிபரின் உத்தரவு...

3 மாசி 2024 சனி 10:16 | பார்வைகள் : 5035


அண்மைக்காலமாக கடற்பகுதியில் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்திவருகிறது. இவ்வாறு ஏவுகணை சோதனை நடத்தி ய நிலையில்  கொரிய தீபகற்பத்தில் போர்பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

போருக்கான தயார்நிலையில் இருக்குமாறு வடகொரிய அரச தலைவர் கிம் ஜாங் அன் தனது இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார் என்ந தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பதற்றத்துக்கு மத்தியில் கிம் ஜாங் அன் நம்போவில் உள்ள கப்பல் கட்டும் தளத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு சென்ற அவர் அங்குள்ள இராணுவ வீரர்களிடையே உரையாற்றும்போது,

நாட்டின் கடல்சார் இறையாண்மையை பாதுகாப்பதிலும், போர் தயாரிப்புகளை முடுக்கி விடுவதிலும் கடற்படை முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே போருக்கான ஏற்பாடுகளை முடுக்கி விடுமாறு இராணுவத்துக்கு அழைப்பு விடுத்தார்.

அவரின் இந்த அறிவிப்பு கொரிய தீபகற்ப பகுதியில் மீண்டும் போர்ப்பதற்றத்தை அதிகரித்துள்ளது. 


 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்