Paristamil Navigation Paristamil advert login

கொழும்பில் 1500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் குவிப்பு!

கொழும்பில் 1500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் குவிப்பு!

3 மாசி 2024 சனி 10:36 | பார்வைகள் : 1432


கொழும்பில் விசேட போக்குவரத்து கடமைகளுக்காக சுமார் 1500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

76 ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பாதுகாப்பு மற்றும் ஏனைய கடமைகளுக்காக 4,000 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

 போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பில் இன்றும் நாளையும் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்