Paristamil Navigation Paristamil advert login

வீதிகளில் சென்றவர்களை அச்சுறுத்திய - fiché S கண்காணிப்பில் உள்ள ஒருவர் கைது!!

வீதிகளில் சென்றவர்களை அச்சுறுத்திய - fiché S  கண்காணிப்பில் உள்ள ஒருவர் கைது!!

3 மாசி 2024 சனி 16:30 | பார்வைகள் : 3696


வீதிகளில் சென்றவர்களை கத்தி ஒன்றின் முலம் அச்சுறுத்தல் விடுத்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Lyon நகரில் இச்சம்பவம் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.  8 ஆம் வட்டாரத்தின் Boulevard desUnis பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த பாதசாரிகள் சிலரை 28 வயதுடைய ஒருவர் தாக்க முற்பட்டுள்ளார். கத்தி ஒன்றினை வைத்து வீதியில் சென்றவர்களை மிரட்டியுள்ளார்.

உடனடியாக காவல்துறையினர் அழைக்கப்பட்டு குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதானவர் fiché S கண்காணிப்பு வலையத்துக்கு உட்பட்டவர் எனவும், முன்னதாக பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட முற்பட்டிருந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்