Noisy-le-Grand : வீடொன்றில் இருந்து 5 வயது சிறுவனின் சடலம் மீட்பு! - தாய் கைது!!
4 மாசி 2024 ஞாயிறு 17:02 | பார்வைகள் : 3033
Noisy-le-Grand (Seine-Saint-Denis) நகரில் உள்ள வீடொன்றில் இருந்து ஐந்து வயது சிறுவன் ஒருவனது சடலம் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
குளியல் தொட்டியில் இறந்து கிடந்த நிலையில், நேற்று சனிக்கிழமை இரவு 9.30 மணி அளவில் சடலத்தை மீட்டுள்ளனர். 36 வயதுடைய சிறுவனின் தயாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிறுவனின் தந்தை தேடப்பட்டு வருகிறார்.
சிறுவன் இறந்து எப்படி என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
சிறுவனின் உடலில் வெட்டுக்காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.