Paristamil Navigation Paristamil advert login

அவுஸ்திரேலிய எழுத்தாளருக்கு மரணதண்டனை விதித்த  சீனா

அவுஸ்திரேலிய எழுத்தாளருக்கு மரணதண்டனை விதித்த  சீனா

5 மாசி 2024 திங்கள் 10:08 | பார்வைகள் : 2362


சீனாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டில்  அவுஸ்திரேலிய எழுத்தாளர் யாங் ஹெங்ஜூன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு  சீனா ஒத்திவைக்கப்பட்ட மரணதண்டனையை விதித்துள்ளது.

மரணதண்டனை இரண்டு வருடங்களிற்கு பின்னர் ஆயுள்தண்டனையாக மாற்றப்படலாம் என அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

சீனா விவகாரங்கள் குறித்து பதிவிட்டு வந்த யாங் உளவு பார்த்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார்.

சீனாவின் தீர்ப்பினால் அதிர்ச்சியடைந்துள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அனைத்து அவுஸ்திரேலியர்களும் அவர் யாங் தனது குடும்பத்துடன் இணைவதை விரும்புகின்றனர் அவர் விடுதலை செய்யப்படவேண்டும் என்ற பரப்புரையை நாங்கள் நிறுத்தப்போவதில்லை அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

முன்னர் சீனாவின் மாநில பாதுகாப்பு அமைச்சகத்தில் பணியாற்றிய யங் ஜனநாயக கடத்தல்காரர் என அழைக்கப்பட்டார் அவரது எழுத்துக்கள் அரசாங்கத்தை நேரடியாக விமர்சிப்பதை தவிர்த்துள்ளன.

2019 ஆம் ஆண்டு குவாங்சோ விமான நிலையத்தில் சீனாவிற்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் இவர் தடுத்துநிறுத்தப்பட்டார்.

அதன் பின்னர் இவர் குறித்த விசாரணைகள் மூடிய கதவுகளின் பின்னால் இடம்பெற்றுள்ளன - 2021இல் இரகசிய விசாரணையும் இடம்பெற்றது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்