உலக அழகிப் போட்டி- மகுடம் சூடிய செக் குடியரசுப் பெண்
10 பங்குனி 2024 ஞாயிறு 14:31 | பார்வைகள் : 3787
இந்தியாவில் நடைபெற்ற 71வது உலக அழகிப் போட்டியில் செக் குடியரசை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா (25) என்பவர் மகுடம் சூடினார்.
இந்த போட்டியில், பல்வேறு நாடுகளை சேர்ந்த 117 பேர் போட்டியில் பங்கேற்றனர்.
இந்தியாவை சேர்ந்த சினி ஷெட்டி உள்பட 14 பேர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.
இந்நிலையில், செக் குடியரசை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா உலக அழகி பட்டத்தை வென்றார்.