Paristamil Navigation Paristamil advert login

ஜாபர் சாதிக் மீது அமலாக்கத்துறை வழக்கு

ஜாபர் சாதிக் மீது அமலாக்கத்துறை வழக்கு

10 பங்குனி 2024 ஞாயிறு 15:27 | பார்வைகள் : 2411


போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் மீது சட்ட விரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த ஜாபர் சாதிக் நேற்று கைது செய்யப்பட்டார். மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவரை கைது செய்தனர். டில்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு தலைமை அலுவலகத்தில் அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஜாபர் சாதிக் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. சட்ட விரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக ஜாபர் சாதிக் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்