Paristamil Navigation Paristamil advert login

வெடுக்குநாறிமலை விவகாரம் தொடர்பில் கைதானவர்கள் உண்ணாவிரதம்!

வெடுக்குநாறிமலை விவகாரம் தொடர்பில் கைதானவர்கள் உண்ணாவிரதம்!

13 பங்குனி 2024 புதன் 14:39 | பார்வைகள் : 2384


வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய விவகாரம் தொடர்பில் கைது செய்ப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் தமக்கு நீதிக்கோரி வவுனியா சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

வவுனியா, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட எட்டு பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நேற்றையதினம் வவுனியா நீதவான் நீதிமன்று உத்தரவு பிறப்பித்திருந்தது.

.இந்த நிலையில் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் தமக்கு நீதிகோரி உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களை சிறைச்சாலைக்கு சென்று உறவினர்கள் பார்வையிட்டபோதே குறித்த எட்டு பேரும் நேற்றுமுதல் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

திலகநாதன் கிந்துஜன் , சுப்பிரமணியம் தவபாலசிங்கம் , மதிமுகராசா , துரைராசா தமிழச்செல்வன் , விநாயகமூர்த்தி ஆகியோரே நேற்று முதல் உணவு தவிர்ப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்