Paristamil Navigation Paristamil advert login

கனடா செல்ல விரும்பாத யாழ் இளைஞன் எடுத்த விபரீத முடிவு

கனடா செல்ல விரும்பாத யாழ் இளைஞன் எடுத்த விபரீத முடிவு

13 பங்குனி 2024 புதன் 15:39 | பார்வைகள் : 2439


கனடா செல்ல விரும்பாத மாற்று திறனாளி ஒருவர் தனது உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியை சேர்ந்த 32 வயதுடைய மாற்று திறனாளியே தனது உயிரை மாய்த்துள்ளார். 

குறித்த நபரின் சகோதரி , கனடா நாட்டில் வசித்து வரும் நிலையில் , மாற்று திறனாளியான தனது சகோதரனையும் , தனது தாயாரையும் விசிட் விசா மூலம் கனடா நாட்டிற்கு அழைக்க முற்பட்ட நிலையில் , இருவருக்கும் விசா கிடைத்துள்ளது. 

ஆனால் தான் கனடா வர மாட்டேன் என மாற்று திறனாளியான இளைஞன் கூறி வந்த நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்