போதைப்பொருள் கடத்தல்! - ஆறு மாதங்களில் 900 பேர் கைது!!

13 பங்குனி 2024 புதன் 17:58 | பார்வைகள் : 15009
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 900 பேர் கடந்த ஆறு மாதங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் இருந்து போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக மிக தீவிரமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜொந்தாம் வீரர்கள் நாடு முழுவதும் பலத்த தேடுதல் வேட்டையும், பலரை கைதும் செய்துள்ளனர். அவ்வாறாக கடந்த ஆறு மாதங்களில் 900 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜொந்தாம் படையின் உயரதிகாரி Christian Rodriguez தெரிவித்தார்.
குறிப்பாக Nîmes, Valence, Garge-lès-Gonesse, Poitiers மற்றும் Tours நகரங்களில் அதிகளவான கைது சம்பவங்கள் இடம்பெற்றதாகவும் தெரிவித்தார்.
போதைப்பொருள் கடத்தலில் மிக மேல்மட்டங்களில் உள்ள பலரை கைது செய்துள்ளதாகவும், வலைப்பின்னல் போன்று செயற்பட்ட பல குழுவை முழுவதுமாக அழித்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1