Paristamil Navigation Paristamil advert login

வீதி விபத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

வீதி விபத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

14 பங்குனி 2024 வியாழன் 16:18 | பார்வைகள் : 4876


வீதி விபத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 3% சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் 103 பேர் வீதி விபத்தில் கொல்லப்பட்டிருந்தனர். இவ்வருடத்தின் பெப்ரவரி மாதத்தில் 114  பேர் கொல்லப்பட்டனர். 11 பேரால் இந்த எண்ணிக்கை (3% சதவீதம்) அதிகமாகும்.

கொல்லப்பட்டவர்களில் பாதசாதிகளின் எண்ணிக்கையும் 12 பேரால் அதிகமாகும். சென்ற ஆண்டு பெப்ரவரியில் 35 பாதசாரிகளும், இவ்வாண்டு பெப்ரவரியில் 47 பாதசாரிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.

மேற்படி தகவல்கள் தேசிய வீதி பாதுகாப்பு அதிகார சபை (l'Observatoire national interministériel de la sécurité routière (ONISR) அறிவித்துள்ளது.

(2024 ஆம் ஆண்டு லீப் வருடம் என்பதால்  பெப்ரவரி மாதத்தில் மேலதிகமாக ஒரு நாள் உள்ளமை குறிப்பிடத்தக்கது)

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்