Paristamil Navigation Paristamil advert login

ஜப்பானில் திடீரென ஏற்பட்ட  நிலநடுக்கம்!  சுனாமி எச்சரிக்கை!

ஜப்பானில் திடீரென ஏற்பட்ட  நிலநடுக்கம்!  சுனாமி எச்சரிக்கை!

15 பங்குனி 2024 வெள்ளி 08:57 | பார்வைகள் : 5983


ஜப்பான் நாட்டில் ஏற்பட்டுள்ள தொடர் நிலநடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் இன்றிரவு 8.44 மணிக்கு ரிக்டர் 6.0 அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

இதேவேளை, இந்தியாவின் ஆந்திர மாநிலம் திருப்பதியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாகவும், இது ரிக்டரில் 3.9 ஆக பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக திருப்பதில் இருந்து 58 கிலோமீட்டர் தொலையில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வு இரவு 8.43 மணி அளவில் உணரப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்