Paristamil Navigation Paristamil advert login

நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னம் கோரிய வழக்கு : தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னம் கோரிய வழக்கு : தேர்தல் ஆணையம் பதிலளிக்க  உத்தரவு

15 பங்குனி 2024 வெள்ளி 09:59 | பார்வைகள் : 2810


நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாததை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து சுப்ரீம் கோர்ட்டில் அந்த கட்சி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது.

அப்போது நாம் தமிழர் கட்சி சார்பில் விவசாயி சின்னத்தை வேறு கட்சிக்கு ஒதுக்கி இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அந்த கட்சி சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.நாம் தமிழர் கட்சி தொடர்ந்து கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டிருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.இதை தொடர்ந்து தேர்தல் ஆணையம் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்