Paristamil Navigation Paristamil advert login

◉ வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் ஏழு நாட்களின் பின்னர் சடலமாக மீட்பு!

◉ வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் ஏழு நாட்களின் பின்னர் சடலமாக மீட்பு!

15 பங்குனி 2024 வெள்ளி 16:29 | பார்வைகள் : 4216


கடந்த சனிக்கிழமை Gard மாவட்டத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன், ஏழு நாட்களின் பின்னர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்தவாரம் பிரான்சின் தெற்கு பகுதியை கடும் புயல் மற்றும் மழை வெள்ளம் சூறையாடியிருந்தது. அதன்போது தந்தை, அவரது 4 மற்றும் 12 வயதுடைய பிள்ளைகளுடன் பயணித்த மகிழுந்து புயலில் சிக்குண்டு ஆற்றில் அடித்துச் சென்றிருந்தது.

அவர்கள் தேடப்பட்ட நிலையில், தந்தை மற்றும் 4 வயது மகனின் சடலங்கள் முன்னதாக மீட்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று மார்ச் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 12 வயதுடைய இரண்டாவது மகனின் சடலமும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் புயல் வெள்ளத்தினால் பலியானவர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்வடைந்துள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்