Paristamil Navigation Paristamil advert login

தென்னிந்திய திரையுலகிற்கு வரும் கரீனா கபூர்..

தென்னிந்திய திரையுலகிற்கு வரும் கரீனா கபூர்..

18 பங்குனி 2024 திங்கள் 13:59 | பார்வைகள் : 2255


 முதல் முறையாக கன்னட நடிகர் யாஷ் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க கரீனா கபூர் ஒப்புக்கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அவரே பேசிய போது ’முதல் முறையாக தென்னிந்திய திரைப்படம் ஒன்றில் அடிக்கிறேன், பான் இந்திய திரைப்படமான இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது எங்கு நடக்கிறது என்று எனக்கு தெரியாவிட்டாலும் இந்த தகவலை நான் ரசிகர்களுக்கு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

யாஷ் நடிப்பில் உருவாகி வரும் ’டாக்ஸிக்’ என்ற திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக உருவாகி வரும் நிலையில் இந்த படத்தில் தான் கரீனா கபூர் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் ரசிகர்கள் போலவே தென்னிந்திய ரசிகர்களும் அவரை வரவேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்