Paristamil Navigation Paristamil advert login

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு தப்பி செல்லும் குற்றவாளிகள்

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு தப்பி செல்லும் குற்றவாளிகள்

20 பங்குனி 2024 புதன் 06:46 | பார்வைகள் : 3004


பாதாள உலக தலைவர்கள் ஐந்து பேர் நாட்டிலிருந்து தப்பிச் செல்வதற்காக  விமான டிக்கெட்டுகள் எவ்வாறு வழங்கப்பட்டது என்பது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் இரண்டு பிரதி கட்டுப்பாட்டாளர்கள் மத்துகம ஷான் மற்றும் ஹினடயான மகேஷ் ஆகியோருக்கு போலி ஆவணங்கள் மூலம் கடவுச்சீட்டை தயாரித்த சம்பவத்துடன் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த 5 பாதாள உலக தலைவர்களில் கொஸ்கொட சுஜீ, ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகியோர் உள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதாள உலக நாடுகளுக்கான விமான டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஊழல் அதிகாரிகள் கும்பலை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் தொடர்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் உத்தரவின் பேரில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவின் மேற்பார்வையில் மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்