Paristamil Navigation Paristamil advert login

தாமரை கோபுரத்தை சேதப்படுத்திய ஆண் பெண்ணுக்கு நேர்ந்த கதி

தாமரை கோபுரத்தை சேதப்படுத்திய ஆண் பெண்ணுக்கு நேர்ந்த கதி

10 ஆவணி 2023 வியாழன் 08:52 | பார்வைகள் : 7280


கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்தில் சொத்துக்களை சேதப்படுத்தியதாக கூறப்படும் பெண்களும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீடியோ காட்சிகளின்படி , பெண்கள் வெளிப்புற கண்காணிப்பு தளத்தின் விளிம்பில் எழுதுவதைக் காண முடிந்துள்ளது.

கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்டதையடுத்து மருதானை பொலிஸாரால் குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை அமுல்படுத்தப்படும் என கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனத்தினால் பல எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், அண்மைக்காலமாக அழிவுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்