தாமரை கோபுரத்தை சேதப்படுத்திய ஆண் பெண்ணுக்கு நேர்ந்த கதி
10 ஆவணி 2023 வியாழன் 08:52 | பார்வைகள் : 8335
கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்தில் சொத்துக்களை சேதப்படுத்தியதாக கூறப்படும் பெண்களும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீடியோ காட்சிகளின்படி , பெண்கள் வெளிப்புற கண்காணிப்பு தளத்தின் விளிம்பில் எழுதுவதைக் காண முடிந்துள்ளது.
கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்டதையடுத்து மருதானை பொலிஸாரால் குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை அமுல்படுத்தப்படும் என கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனத்தினால் பல எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், அண்மைக்காலமாக அழிவுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025


























Bons Plans
Annuaire
Scan