யாழ்.போதனாவில் இருந்து வெளியேறிய நோயாளி வீதியில் விழுந்து மரணம்

23 பங்குனி 2024 சனி 05:45 | பார்வைகள் : 12093
யாழ். போதனா வைத்தியசாலையில், விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று நோயாளி ஒருவர் , வைத்தியசாலையை விட்டு, அனுமதியின்றி வெளியேறிய நிலையில் வீதியில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் , தலையாழி பகுதியை சேர்ந்த பஞ்சலிங்கம் தினேஷ் (வயது 44) என்பவரே உயிரிழந்துள்ளார்.
மூச்செடுக்க முடியாமல் ,சிரமமாக உள்ளதாக தெரிவித்து , வைத்தியசாலையில் அனுமதியாகி இருந்தார். அதனை அடுத்து அவரை விடுதியில் மறித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை வைத்தியசாலை விடுதியில் இருந்து அனுமதியின்றி வெளியேறியவர் , வைத்தியசாலை வளாகத்தை விட்டு , வெளியேறி சிறிது தூரம் சென்ற நிலையில் , வீதியில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025