Paristamil Navigation Paristamil advert login

யாழ்.போதனாவில் இருந்து வெளியேறிய நோயாளி வீதியில் விழுந்து மரணம்

யாழ்.போதனாவில் இருந்து வெளியேறிய நோயாளி வீதியில் விழுந்து மரணம்

23 பங்குனி 2024 சனி 05:45 | பார்வைகள் : 2044


யாழ். போதனா வைத்தியசாலையில், விடுதியில் தங்கியிருந்து  சிகிச்சை பெற்று நோயாளி ஒருவர் , வைத்தியசாலையை விட்டு, அனுமதியின்றி வெளியேறிய நிலையில் வீதியில் விழுந்து உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் , தலையாழி பகுதியை சேர்ந்த பஞ்சலிங்கம் தினேஷ் (வயது 44) என்பவரே உயிரிழந்துள்ளார். 

மூச்செடுக்க முடியாமல் ,சிரமமாக உள்ளதாக தெரிவித்து , வைத்தியசாலையில் அனுமதியாகி இருந்தார். அதனை அடுத்து அவரை விடுதியில் மறித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை வைத்தியசாலை விடுதியில் இருந்து அனுமதியின்றி வெளியேறியவர் , வைத்தியசாலை வளாகத்தை விட்டு , வெளியேறி சிறிது தூரம் சென்ற நிலையில் , வீதியில் விழுந்து உயிரிழந்துள்ளார். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்