ரொறன்ரோவில் கடன் அட்டை இயந்திர திருட்டு - அதிர்ச்சியில் தகவல்

24 பங்குனி 2024 ஞாயிறு 10:48 | பார்வைகள் : 8920
xரொறன்ரோவில் கடன் அட்டை இயந்திர திருட்டுச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.
சிறு வியாபாரங்களில் ஈடுபடும் நிறுவனங்கள் அதிகளவில் இலக்கு வைக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வங்கி அட்டைகள் மூலம் கொடுக்கல் வாங்கல் செய்வதற்கு உதவும் இயந்திரங்கள் இவ்வாறு களவாடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறு வியாபாரங்களில் ஈடுபடுவோர் இந்த நடவடிக்கைகளினால் பெரிதும் பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2023ம் சுமார் 300 சிறு வியாபார நிறுவனங்களின் விற்பனை இயந்திரங்கள் களவாடப்பட்டுள்ளன.
இவ்வாறான களவுச் சம்பவங்களினால் சில நிறுவனங்கள் 50,000 டொலர்கள் வரையில் நட்டமடைந்துள்ளன.