Paristamil Navigation Paristamil advert login

பிரித்தானியாவில் பதின்பருவ பெண்ணுக்கு நேர்ந்த கதி! 12 வயது சிறுவன் கைது

பிரித்தானியாவில் பதின்பருவ பெண்ணுக்கு நேர்ந்த கதி! 12 வயது சிறுவன் கைது

24 பங்குனி 2024 ஞாயிறு 13:40 | பார்வைகள் : 2957


பிரித்தானியாவில் பதின்பருவ பெண்னை 12 வயது சிறுவன் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் Kent என்ற இடத்தின் Sittingbourne பகுதியில் பதின்பருவ பெண்ணை(teenage girl) 12 வயது சிறுவன் கத்தியால் குத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.

வெள்ளிக்கிழமை, மாலை 3.55 மணியளவில், Adelaide Drive என்ற இடத்தில் கத்திக்குத்து சம்பவம் நடந்ததாக தகவல் கிடைத்ததையடுத்து அதிகாரிகள் மற்றும் துணை மருத்துவ குழுவினர் அங்கு விரைந்தனர்.

சம்பவ இடத்தில் கத்திக் குத்துக் காயங்களுடன் இருந்த teenage பெண்ணை மீட்டு, சிகிச்சைக்காக லண்டன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

தற்போது அவர் நிலையாக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் காயம் ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 12 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணை தொடரும் நிலையில் அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார். 

இச்சம்பவம் குறித்து தகவல் அளிக்கும்படி கென்ட் காவல்துறை சாட்சிகளை கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்பாக, கத்திக்குத்து நடந்த சமயத்தில் அடிலெய்ட் டிரைவ் பகுதியில் இருந்து கிடைத்த CCTV அல்லது டேஷ் கேம் காட்சிகளை வழங்குமாறு கேட்டுக்  கொள்ளப்பட்டுள்ளது. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்