Paristamil Navigation Paristamil advert login

யாழில் விபத்தில் சிக்கியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

யாழில் விபத்தில் சிக்கியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

25 பங்குனி 2024 திங்கள் 06:12 | பார்வைகள் : 2132


யாழ்ப்பாணம் புங்குடுதீவில் ஆலயத்திற்கு சென்று விட்டு, நடந்து வீடு திரும்பி கொண்டிருந்தவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

புங்குடுதீவை சேர்ந்த ஜோசன் கஜேந்திரன் (வயது 46) என்பவரே உயிரிழந்துள்ளார். 

புங்குடுதீவு பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு கடந்த 20 ஆம் திகதி சென்று விட்டு, தனது வீடு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தவர் மீது , வீதியில் வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்கு உள்ளானது. 

விபத்தில் படுகாயமடைந்தவர் , யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சனிக்கிழமை(23) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்