Paristamil Navigation Paristamil advert login

கட்டுநாயக்கவில் விமான நிலையத்தில் 88 விலங்குகளுடன் சிக்கிய தம்பதி

கட்டுநாயக்கவில் விமான நிலையத்தில் 88 விலங்குகளுடன் சிக்கிய தம்பதி

26 பங்குனி 2024 செவ்வாய் 11:58 | பார்வைகள் : 2018


தாய்லாந்திலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட 88 விலங்குகளுடன் இளம் வர்த்தக தம்பதி ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 

சுங்கத் திணைக்கள அதிகாரிகள் குறித்த தம்பதியர்களை சோதனையிட்ட போது 4000,000 ரூபா பெறுமதியான 88 விலங்குகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

சிறிய பொலித்தீன் பைகளில்  அடைக்கப்பட்ட நிலையில்  தவளை, மீன், குளவி, அணில், ஆமை, பல்லி, வௌவால், மற்றொரு வகை புழு, எலி போன்றவை இவர்களால்   கொண்டுவரப்பட்டதாகச் சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். 

கைதான தம்பதியர்  அவிசாவளை, புவக்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளதுடன் இந்த விடயம்  தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சுங்க திணைக்களம் மேற்கொண்டு வருகின்றனர். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்