Paristamil Navigation Paristamil advert login

Bagnolet : பூச்சிக்கொல்லி மருந்தை சுவாசித்த குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதி!

Bagnolet : பூச்சிக்கொல்லி மருந்தை சுவாசித்த குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதி!

24 மாசி 2024 சனி 18:08 | பார்வைகள் : 3673


மூட்டைப்பூச்சிகளுக்கு எதிராக பயன்படுத்தப்படும் பூச்சிகொல்லியை சுவாசித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று பெப்ரவரி 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இச்சம்பவம் Bagnolet (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்றுள்ளது. அங்கு வசிக்கும் நபர் ஒருவர் இரவு 11 மணி அளவில் தீயணைப்பு படையினரை உதவிக்கு அழைத்துள்ளார். குடும்பத்தலைவர் ஒருவரும், அவரது 7 மாத கர்ப்பிணி மனைவியும், அவர்களில் 4 மற்றும் 3 வயதுடைய பிள்ளைகளும் மூச்சுத்திணறலுக்கு உள்ளாகி சுவாசிக்க சிரமடைந்துள்ளனர்.

பிரான்சின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள பூச்சி கொல்லியினை மூட்டைப்பூச்சிகளை அழிக்க பயன்படுத்திய நிலையில், குடும்பத்தினர் மூச்சுத்திணறலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் André-Grégoire மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்