Paristamil Navigation Paristamil advert login

கடனுக்காக அதிக வட்டியை செலுத்தும் நாடாகிய இலங்கை!

கடனுக்காக அதிக வட்டியை செலுத்தும் நாடாகிய இலங்கை!

25 மாசி 2024 ஞாயிறு 10:24 | பார்வைகள் : 1503


உலக வங்கியின் அபிவிருத்திக் குறிகாட்டிகளுக்கு அமைய, அரச வருமானத்தில் இருந்து கடனுக்காக அதிக வட்டியை செலுத்தும் நாடு இலங்கையே என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

2000ஆம் ஆண்டில், இலங்கை அரசாங்கம் அதன் வருமானத்திலிருந்து, கடனுக்காக 33 சதவீத வட்டியை செலுத்தியது.

அதன்படி, அந்த ஆண்டில் கடனுக்காக வட்டி செலுத்தும் நாடுகளில் இலங்கை ஐந்தாவது இடத்தில் இருந்தது

2010 ஆம் ஆண்டு, கடனுக்காக அதிக வட்டி செலுத்தும் நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் காணப்பட்டது,

அந்த ஆண்டில் செலுத்திய வட்டியானது அரச வருமானத்தில், 42 சதவீதமாகும்.

பின்னர் இலங்கை தமது அரச வருமானத்தில், 71 சதவீதத்தை 2020ஆம் ஆண்டிலும், 2023ஆம் ஆண்டு 77 சதவீதத்தையும் கடனுக்கான வட்டியாக செலுத்தியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

2020 ஆம் ஆண்டில், அரச வருமனாத்திலிருந்து, கடனுக்கு அதிக வட்டி செலுத்தும் நாடுகளில் லெபனான் முதலாம் இடத்தில் காணப்பட்டது.

அது அரச வருமானத்தில், 95 சதவீதமாக காணப்பட்டது.

2000 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கடனுக்காக அதிக வட்டியை செலுத்தும் நாடாக இலங்கை காணப்படுவதாக பேராதனை பல்கலைகழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் வசந்த அத்துக்கோரல தெரிவித்துள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்