ரஷ்யாவின் துறைமுகமான நோவோரோசிஸ்க் மீது தாக்குதல் நடத்திய உக்ரைன்
.jpg)
6 ஆவணி 2023 ஞாயிறு 08:44 | பார்வைகள் : 8957
ரஷ்ய உக்ரைன் புார் பல மாதங்களை கடந்து இன்னும் தீவிரமடைந்து வருகின்றது.
இந்நிலையில் ரஷ்யாவின் மிகப்பெரிய துறைமுகமான நோவோரோசிஸ்க் (Novorossiysk) மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருங்கடல் பகுதியின் வடகிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள ரஷ்யாவின் மிகப்பெரிய துறைமுகம் நோவோரோசிஸ்க் (Novorossiysk).
உக்ரைனின் உளவுத்துறையும், கடற்படையும் இணைந்து நடத்திய கடல் டிரோன் தாக்குதலில் ரஷ்யாவின் பெரிய கப்பலான ஒலெனெகோர்ஸ்கி கோர்னியாக் (Olenegorsky Gornyak) தாக்கப்பட்டது.
450 கிலோ டைனமைட் வெடிப்பொருளுடன் சென்ற உக்ரைனின் ஆளில்லா சிறுகப்பல்கள் (Sea Drone) தாக்கியதில், அந்த கப்பல் பலத்த சேதமடைந்திருப்பதாகவும், அது தாக்குதல் நடவடிக்கைகளுக்கு இனி பயன்படாது எனவும் உக்ரைன் தரப்பு தெரிவிக்கிறது.
அதேசமயம் இரு ஆளில்லா விமானங்களை இடைமறித்து வீழ்த்தியதாக தெரிவித்த ரஷ்யா, துறைமுகத்தில் தாக்குதல் நடைபெற்றதாக தெரிவிக்கவில்லை.
ரஷ்ய ஏற்றுமதிகளுக்கு நோவோரோசிஸ்க் துறைமுகம் ஒரு முக்கியமான இடம் ஆகும் .
இரண்டாம் உலகப் போரின்போது கட்டமைக்கப்பட்ட 'லேண்டிங் ஷிப்' எனப்படும் வகையை சேர்ந்த ஒலெனெகோர்ஸ்கி கப்பல், ராணுவ தளவாடங்களை நீர் மற்றும் நிலத்தில் இருந்து எளிதாக கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.