காளான் மூலம் தங்கம் தயாரிக்கும் அதிசயம்! Goa ஆராய்ச்சியாளர்கள் சாதனை
3 பங்குனி 2024 ஞாயிறு 13:31 | பார்வைகள் : 8047
கோவாவைச் சேர்ந்த இரு ஆராய்ச்சியாளர்கள், காட்டு காளான் வகையிலிருந்து தங்க நானோ துகள்களை (Gold Nanoparticles) தொகுப்பு முறையில் தயாரித்திருப்பதாக அறிவித்துள்ளனர்.
டாக்டர் சுஜாதா டபோல்கர் (Dr. Sujata Dabolkar) மற்றும் டாக்டர் நந்தகுமார் கமத் (Dr. Nandkumar Kamat) ஆகிய இரு ஆராய்ச்சியாளர்கள் இணைந்து புதிய கண்டுபிடிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இவர்கள் மேற்கொண்ட ஆய்வில், கோவாவில் காணப்படும் "ரோன் ஓம்லி" காளான்களை முப்பரிமாண வடிவத்தில் வளர்த்து, அதன் மூலம் தங்க நானோ துகள்களைத் தொகுத்தனர்.
இந்த முறை, பாரம்பரிய முறைகளை விட சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் கருதப்படுகிறது.
தங்க நானோ துகள்கள் மருத்துவம், மின்னணுவியல், மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பல்வேறு துறைகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இவை, புற்றுநோய் சிகிச்சை, மருந்து விநியோகம், சூரிய மின்கலங்கள், மற்றும் நீர் சுத்திகரிப்பு போன்ற பணிகளில் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த ஆராய்ச்சியில் பயன்படுத்தப்பட்ட காளான் வகை, "ரோன் ஓம்லி" (Roen Olmi) என அழைக்கப்படுகிறது.
இது, டெர்மிடோமைசெஸ் (Termitomyces) என்ற காளான் குடும்பத்தைச் சேர்ந்தது. மழைக்காலங்களில் கிடைக்கும் இந்த காளான் வகை, கோவாவில் மிகவும் பிரபலமான உணவுப் பொருளாகவும் விளங்குகிறது.
இந்த ஆய்வின் மூலம், கோவாவில் காணப்படும் காளான் வகைகளின் மருத்துவ மற்றும் தொழில்துறை முக்கியத்துவம் மேலும் உயர்ந்துள்ளது.
இது, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் புதிய வாய்ப்புகளைத் திறந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


























Bons Plans
Annuaire
Scan