Paristamil Navigation Paristamil advert login

யாழ்ப்பாணத்தில் வயோதிப பெண்ணொருவர் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணத்தில் வயோதிப பெண்ணொருவர் சடலமாக மீட்பு

10 சித்திரை 2024 புதன் 09:33 | பார்வைகள் : 945


யாழ்ப்பாணத்தில் வயோதிப பெண்ணொருவர் ஆடைகளற்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சாந்தினி எனும் 63 வயதுடைய பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

பிள்ளைகள் மற்றும் கணவரை பிரிந்து தனியாக வீட்டில் வசித்து வந்ததாகவும் , நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வீட்டில் சடலமாக காணப்பட்டதை அயலவர்கள் கண்ணுற்று பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். 

பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் சடலத்தை மீட்டு, உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். 

பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்துள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்