Paristamil Navigation Paristamil advert login

Hauts-de-Seine : வெதுப்பக ஊழியர் கத்திக்குத்தில் பலி!!

Hauts-de-Seine : வெதுப்பக ஊழியர் கத்திக்குத்தில் பலி!!

11 சித்திரை 2024 வியாழன் 17:47 | பார்வைகள் : 4192


வெதுப்பக ஊழியர் ஒருவர் நடுவீதியில் வைத்து கத்திக்குது தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று ஏப்ரல் 10, புதன்கிழமை இரவு இத்தாக்குதல் Bagneux (Hauts-de-Seine) நகரில் இடம்பெற்றுள்ளது. இரவு 11 மணி அளவில் குறித்த 47 வயதுடைய ஊழியர், அவருக்குரிய இடைவேளையின் போது வெளியே சென்றிருந்துள்ளார். அப்போது அவரை இருவர் கொண்ட குழு ஒன்று கத்தியால் தாக்கியுள்ளனர்.

rue Charles-Boileau வீதியில் வைத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான நபர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளார். 

தாக்குதலாளிகள் இருவரும் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிய நிலையில், அவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்