Paristamil Navigation Paristamil advert login

RCBயின் IPL கிண்ணக் கனவு...! நெருக்கடியில் அணி வீரர்கள் 

RCBயின் IPL கிண்ணக் கனவு...! நெருக்கடியில் அணி வீரர்கள் 

12 சித்திரை 2024 வெள்ளி 06:47 | பார்வைகள் : 1092


மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வியுற்றதால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஐபிஎல் கிண்ணக் கனவு மங்கியுள்ளது. 


வான்கடேயில் நேற்று நடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இது நடப்பு சீசனில் RCB அணியின் 5வது தோல்வி ஆகும். ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ள RCB -1.124 ரன்ரேட் கொண்டுள்ளது. 

மீதமுள்ள 8 போட்டிகளில் 7 வெற்றிகளை பெற வேண்டிய கட்டாயம் RCBக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏறக்குறைய RCBயின் ஐபிஎல் கிண்ணக் கனவு மங்கியுள்ளது. 

ஏனெனில், ஒவ்வொரு அணியும் பெங்களூரு அணிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் விளையாடி வருகின்றன. எனவே பெங்களூரு அணி வீரர்கள் நெருக்கடியுடனே விளையாட வேண்டிய நிலையில் உள்ளனர்.

தோல்வி குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட RCB, ''டி20 கிரிக்கெட் கொடூரமானது! இந்த சீசன் எங்களுக்கு கடினமான கைகளை கையாண்டுள்ளது, மேலும் எங்கள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் இருவருக்கும் இதய வலி உண்மையானது'' என கூறியுள்ளது. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்